உலகத்தில் பிறந்துவிட்டால் துன்பங்களையே அதிகம் சந்திக்க வேண்டியிருக்கிறது. நடுநடுவில் வரும் இன்பங்கள் அவற்றைத் தற்காலிகமாக மறக்கச் செய்கின்றன. "இன்பமுண்டேல்துன்பமுண்டு ஏழை மனை வாழ்க்கை" என்று சுந்தரர் தேவாரத்தில் வரும். துன்பங்களில் இருந்து விடுதலை பெறும் வழியை மகான்கள் மட்டுமே காட்ட முடியும். ஏனென்றால் , அவர்கள் உலகம் உய்வதற்காகவே அவதரித்தவர்கள். "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" எனக் கூறி அபயம் அளித்தவர்கள். எளிய வழியைக் கூறி அடைக்கலம் காட்டியவர்கள். கடுமையான தவ வாழ்க்கையை எல்லோரும் பின்பற்றி இறைவனை அடைவது கடினம் ஆதலால் இறைவனது நாமங்களைச் சொல்வதாலும் அவன் உறையும்தலங்களின்பெயர்களைக் கூறி சிந்திப்பதாலும் துன்பங்கள் நீங்கப் பெறலாம் என்று உபதேசித்தவர்கள்.Tuesday, December 28, 2010
துன்பம் தீர வழி
உலகத்தில் பிறந்துவிட்டால் துன்பங்களையே அதிகம் சந்திக்க வேண்டியிருக்கிறது. நடுநடுவில் வரும் இன்பங்கள் அவற்றைத் தற்காலிகமாக மறக்கச் செய்கின்றன. "இன்பமுண்டேல்துன்பமுண்டு ஏழை மனை வாழ்க்கை" என்று சுந்தரர் தேவாரத்தில் வரும். துன்பங்களில் இருந்து விடுதலை பெறும் வழியை மகான்கள் மட்டுமே காட்ட முடியும். ஏனென்றால் , அவர்கள் உலகம் உய்வதற்காகவே அவதரித்தவர்கள். "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" எனக் கூறி அபயம் அளித்தவர்கள். எளிய வழியைக் கூறி அடைக்கலம் காட்டியவர்கள். கடுமையான தவ வாழ்க்கையை எல்லோரும் பின்பற்றி இறைவனை அடைவது கடினம் ஆதலால் இறைவனது நாமங்களைச் சொல்வதாலும் அவன் உறையும்தலங்களின்பெயர்களைக் கூறி சிந்திப்பதாலும் துன்பங்கள் நீங்கப் பெறலாம் என்று உபதேசித்தவர்கள்.Sunday, October 24, 2010
பூந்துருத்திப் புண்ணியன்
ஸ்ரீ காஞ்சி பெரியவர்கள் ஒரு சமயம் தருமபுர ஆதீனத்திற்குச் சென்றிருந்தபோது , அங்கிருந்த வேத பாடசாலை மற்றும் ஆகம பாடசாலைகளைப் பார்த்துவிட்டு , தேவார பாடசாலைக்கு விஜயம் செய்த போது, பாடசாலை ஆசிரியராக இருந்த ஸ்ரீ வேலாயுத ஓதுவாமூர்த்திகள் ஏதோ காரியமாக மடத்தின் வேறு பகுதிக்குச் சென்றிருந்தார்கள். பாடசாலை குழந்தைகளிடம் மிக்க மகிழ்ச்சியுடன் உரையாடிய ஸ்ரீ பெரியவர்கள், ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் தேவாரத்தில் இருந்து ஒரு திருத்தாண்டகம் பாடிக்காட்டுமாறு ஒரு மாணவனிடம் கேட்டார்கள். உடனே அவன், திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி மீது அப்பர் பெருமான் பாடிய திருத் தாண்டகப் பதிகத்திலிருந்து ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தான். அவன் பாடிய அப் பாடலின் முதல் இரு வரிகள் பின்வருமாறு:
ஸ்ரீ புஷ்பவநேச்வர சுவாமி மீது பாடப்பெற்றது. சத்திய ச்வரூபனான மூர்த்தியை பொய்யிலி என்று அழைக்கிறது இப்பதிகம். புண்ணிய மூர்த்தியாகவும் வர்ணிக்கிறது . Monday, August 16, 2010
சிவலோகம் ஆளலாம்

Tuesday, May 18, 2010
சபாநாதனிடம் ஒரு கேள்வி

Tuesday, April 20, 2010
கணக்கு எழுதும் இன்னம்பர் ஈசன்

Monday, March 29, 2010
குருவாய் வருவாய்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
என்ற அற்புதமான பாடல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதுதான் என்றாலும் அதன் பொருளை அறிந்து கொண்டால் இன்னும் அதிக இன்பத்தையும் பயனையும் கொடுக்கும் அல்லவா?
முருகன் என்றாலே அழகன் என்று பொருள் சொல்வார்கள். அது ஆயிரம் மன்மதர்கள் சேர்ந்தாலும் சமம் ஆகமாட்டாத பரம்பொருளின் உருவ வர்ணனை. இன்ன உருவம் என்று சொல்ல முடியாத இறைவன் தேவர்களைக் காப்பதற்காக முகங்கள் ஓர் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு உதித்தான் என்கிறார் கந்த புராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார். அதோடு இன்னும் ஒரு காரணமாகவும் அந்த உருவில் தோன்றினான் என்கிறார் அவர். "உலகம் உய்ய" என்பதே அது. கலியுக வரதனாகவும் கண் கண்ட தெய்வமாகவும் இன்றும் தனது பக்தர்களைக் காப்பாற்றி வருகிறான் அவன். அவனை அருணகிரிநாதர் தனது கந்தர் அனுபூதியின் கடைசிப் பாடலில் பல விதங்களில் வரும்படி அழைக்கிறார்.
உருவம் கொண்டு வரும்படி அழைத்த பிறகு அருவ வடிவிலும் வருவாய் என்கிறார். சிவகுமாரன் ஆனதாலும் சிவனது மறு வடிவமாக விளங்குவதாலும் உருவத்தோடும் அருவமாகவும் ஆகி முழுமுதல் கடவுளாக வர வேண்டும் என்று பாடுகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.
மேலும் மருவாகவும் மலராகவும் வர வேண்டும் என்கிறார். "வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே" என்று பரமேச்வரனைத் தேவாரம் பாடுகிறது.அவனது சிருஷ்டிகள் எல்லாம் அவன் வடிவே என்பதால் இவ்வடிவங்களில் வரவேண்டும் என்றார்.
மணியாகவும் மணியின் ஒளியாகவும் இறைவன் விளங்குகிறான்.இப்படித்தான் அபிராமி அந்தாதியும் அம்பாளைப் போற்றுகிறது. இந்த மணியோ நிர்மலமான மணி-அதாவது மாசிலாமணி. இறைவனை மாணிக்க மலை என்றும் போற்றுவது உண்டு.இவனும் மயில் ஏறிய மாணிக்கம் தானே! திருச்சிக்கு அருகில் உள்ள ஊட்டத்தூரில் சுவாமிக்கு சுத்த ரத்திநேச்வரர் என்ற பெயர் உண்டு.
இனி அவனே கருவாகவும் அதைக் காக்கும் தாயாகவும் அக்கருவைத் திருத்தி நல்ல வழி காட்டும் தெய்வமாகவும் வரவேண்டும். "சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும் " என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதை ஏதோ பரிமாறுவதற்கு சொல்லப்படும் வார்த்தை என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அதன் பொருள் என்ன தெரியுமா? சஷ்டியில் விரதம் இருந்தால்தானே அகப்பையில் (கர்ப்பத்தில் ) குழந்தை உண்டாகும் என்பது அதன் அர்த்தம். இப்படிப் பிரார்த்தனைக்குப் பிறகு புத்திர பாக்கியம் ஏற்படுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.சீர்காழியில் தந்தையின் தவப் பயனாகத் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்தார் என்று பெரிய புராணம் சொல்கிறது.
ஸ்கந்தனே நமக்கு நல்ல கதி காட்டுபவன். அவனை விட்டால் நிர்கதிதான். இப்படித் தன்னை சரணம் அடைந்தவர்களை அவன் ஒரு நாளும் கை விடுவதில்லை. நமது விதியையும் அவன் மாற்றுவான். அவன் கால் பட்டவுடன் பிரமன் எழுதிய தலைவிதி அழிந்தது என்று கந்தர் அலங்காரத்தில் பாடுகிறார் அருணகிரியார்.
தாரகத்தின்
பொருளைத் தந்தை செவியில் ஓதிய சுவாமிநாதனைக் குருவாய் வருவாய் என்று வேண்டுகிறார் அருணகிரிப் பெருமான். உலகில் பிரம்மண்யம் குறையும் போதெல்லாம் குரு வடிவாகத் தோன்றிய குமரனை நாமும் இப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.குரு குஹனே சம்பந்தராக அவதரித்தான் என்று திருப்புகழில் பல இடங்களில் சொல்லியிருக்கிறார் அருணகிரிநாதர்.
ஜகமாகிய மாயையில் இருந்து விடுவித்து நல்ல வழி காட்ட மீண்டும் குருவடிவில் வரவேண்டும் என்று மாறிலா வள்ளி பாகனாகிய வள்ளலை இப்பாடல் மூலம் பிரார்த்தனை செய்வோமாக.
Saturday, February 20, 2010
உன்னைத் தவிர யாரை நினைப்பேன்?

Wednesday, January 20, 2010
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்
